/* */

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இருவர் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இருவர் உயிரிழப்பு
X

பள்ளிப்பாளையம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை அடுத்துள்ள வேலாத்தாள் கோவில் பகுதியை சேர்ந்த பிரகதி,வீரமணி ஆகிய இருவரும் தனது சகோதரர் நண்பருடன் நேற்று மாலை பாப்பம்பாளையம் முனியப்பன் கோவில் பின்புறம் செல்லும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பிரகதி,வீரமணி ஆகியோர் நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதையடுத்து இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளனர்.பின்னர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இது குறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவு வெகு நேரம் தேடியும் உடல் கிடைக்காததால் இன்று காலை தொடர்ந்து தேடி, உயிரிழந்த இருவரின் உடலை மீட்கும் பணியில் 15மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!