Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், சரோஜா மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மூன்று சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளனர். தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கும் சிறந்த காளைக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.