/* */

இலை சின்னத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பு

ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு அமைச்சர் ஓ எஸ் மணியன் வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

இலை சின்னத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பு
X

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிகள் ஆன கரியாப்பட்டிணம், தென்னம்புலம், வடமழை, மணக்காடு, பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர் ஓ எஸ் மணியன் ஈடுபட்டு வருகிறார்.

செல்லும் இடமெங்கும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது, வழிநெடுகிலும் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் பொதுமக்கள் மரியாதை செய்து வருகின்றனர். அவர்களிடத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும், மாதத்திற்கு பெண்களுக்கான 1500 ரூபாய் தொகை வழங்கப்படும், முதியோர் உதவித் தொகையை உயர்த்தி வழங்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிதொகை உயர்த்தி வழங்கப்படும் என பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மக்களிடத்தில் ஓட்டுகளை சேகரித்து வருகிறார். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

Updated On: 26 March 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?