Begin typing your search above and press return to search.
ஆமை முட்டைகள் சேகரிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை ஆறுகாட்டுத்துறை கடல் பகுதி இடங்களில் அரியவகை ஆமைமுட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர். இந்த ஆண்டு இதுவரை இரு இடங்களிலும் 57 கட்டங்களாக 6291 ஆமை முட்டைகளை அங்குள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இதற்கிடையில் வைகை டேம் வனக்கல்லூரியி லிருந்து வந்துள்ள பயிற்சி வனவர்களுக்கு ஆமை முட்டைகள் சேகரிப்பது பாதுகாப்பது குறித்து வனத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.