/* */

இலங்கைக்கு கடத்த இருந்த விரலி மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த விரலி மஞ்சள் பறிமுதல்
X

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 750 கிலோ விரலி மஞ்சள், 60 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை கடலோர காவல் குழும போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி கிராமம் உலகநாதன்காடு பகுதியை சோ்ந்தவர் கிருஷ்ணமூா்த்தி (56). இவரது வீட்டில் விரலி மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா்.அப்போது 30 மூட்டைகளில் 750 கிலோ மஞ்சள், 3 மூட்டைகளில் 60 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், மஞ்சள், ஏலக்காய் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணமூா்த்தி, கஞ்சமலைக்காடு சத்தியராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On: 20 Jan 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்