Begin typing your search above and press return to search.
முதல்வர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு, போலிசார் வழக்கு
நாகப்பட்டினத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
HIGHLIGHTS
நாகை வெளிப்பாளையம் சங்கரவிநாயகர் கோயில் மேல்சந்து பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவரன்(30) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மீது நாகை வெளிப்பாளையம் தாமரைகுளம் தென்கரையை சேர்ந்த திமுக நிர்வாகி விமல்மொக்கை என்பவர் வெளிப் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்ற போலிசார் ஸ்ரீவரன் முகநூல் பக்கத்தில் உள்ள முதல்வர் குறித்த அவதூறு கருத்துக்களை கண்டறிந்தனர். பின்னர் ஸ்ரீவரன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த வெளிப்பாளையம் போலிசார் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.