Begin typing your search above and press return to search.
நாகை: இன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய இஸ்லாமியர்கள்
நாகை அரசு மருத்துவனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க காசு வழங்கி மிலாடி நபி பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மிலாடி நபி பண்டிகை பேரணிகள் செல்ல கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மிலாடி நபியான இன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பாக பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மிலாடி நபி பண்டிகையை கொண்டாடும் வகையில் முதலாவது பிறந்த வேதாரண்யம் அடுத்துள்ள அண்டகத்துரை கிராமத்தை சேர்ந்த மேகலா - செந்தமிழ் செல்வன் தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க காசையும், அடுத்தடுத்து பிறந்த 25 குழந்தைகளுக்கு கொசுவலை உள்ளிட்ட 25 பொருட்கள் அடங்கிய பெட்டகமும் பரிசாக வழங்கி இஸ்லாமியர்கள் மிலாடி நபி பண்டிகையை கொண்டாடினர்.