/* */

நாகை: பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு

நாகை மாவட்டத்தில் விதவைபெண்ணிற்கு பாலியல்தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

நாகை:  பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு
X
போலீசாரால் தேடப்படும் விநாயகமூர்த்தி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரதெருவைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது கணவர் லியோ ஜோசப், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, ரம்யா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கணவனை இழந்த ரம்யா தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளராக உள்ள விநாயக மூர்த்தி என்பவர் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று தன் ஆசைக்கு இணங்குமாறு பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரம்யா, விநாயகமூர்த்தி மீது, நாகை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், பெண்ணை அவமானப்படுத்துதல் மற்றும் அங்கங்களை வர்ணித்து கொச்சை வார்த்தைகள் கூறி உல்லாசத்திற்கு அழைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாகை மகளிர் போலீசார் அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள விநாயகமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    நேர்மறை சிந்தனை வளர்க்கும் திருக்குறள்..!
  2. பட்டுக்கோட்டை
    தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!
  3. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  4. ஈரோடு
    நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் தி.மு.க. அரசிற்கு எதிரான ஆய்வறிக்கை வெளியிட்ட அமைப்பு
  7. திருவள்ளூர்
    ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்
  8. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,200 மூட்டை பருத்தி ஏலம் மூலம்
  9. மாதவரம்
    பெண் விவகாரத்தில் பீர் பாட்டிலால் இளைஞரை தாக்கிய மூன்று பேர் கைது
  10. மதுரை மாநகர்
    மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை