/* */

நாகையில் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

நாகையில் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

நாகையில் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
X

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா, வேளாங்கன்னி அருகே செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை குப்பு முத்து மகன் செல்வம். இவர் கடந்த மாதம் கீழ்வேளூர் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கிற்காக கீழ்வேளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

மேலும் செல்வம் மீது கீழையூர், வேளாங்கன்னி, வெளிப்பாளையம் சீர்காழி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை, சாராய வழக்குகள் உள்ளது. இதை தொடர்ந்து கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியன் ஆகியோர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ்.

சூப்பிரண்டு செல்வம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் செல்வத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று கீழ்வேளூர் போலீசார் நாகை மாவட்ட சிறையில் இருந்த செல்வத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 July 2021 3:16 AM GMT

Related News

Latest News

  1. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  2. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  3. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  4. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  7. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  8. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  9. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  10. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!