/* */

உயிருடன் விளையாடும் மின்வாரியம்: புதைவட கம்பியில் மின்கசிவால் விபத்து

வேளாங்கண்ணியில், மழையால் புதைவட மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி 3 பேர் காயம், ஒரு ஆடு பரிதாபமாக உயிரிழந்தது.

HIGHLIGHTS

உயிருடன் விளையாடும் மின்வாரியம்: புதைவட கம்பியில் மின்கசிவால் விபத்து
X

புதைவட மின்கசிவால் உயிரிழந்த ஆடு.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செபஸ்தியார் நகர் 14வது வார்டில், புதைவட மின்சாரம் செல்கிறது. வேளாங்கண்ணியில் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி பூமிக்கடியில் சென்றுள்ளது. இதனால், புதைவட மின் கம்பியில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால், அவ்வழியே சென்ற மூன்று நபர்களை மின்சாரம் தாக்கி காயம் அடைந்தனர். அவ்வழியே சென்ற ஆடு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெருமளவு உயிர்சேதம் தடுக்கப்பட்டது. இப்பகுதியில் சாலைகள் முறையாக சீரமைக்க வில்லை எனவும் பாதாள சாக்கடை பணிகள் முறையாக நடைபெறவில்லை எனவும், மின் புதைவட கேபிள்கள் பாதுகாப்பின்றி பதிக்கப்பட்டுள்ளதாகவும், செபஸ்தியார் நகர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். புதைவட மின் கம்பியில் மின்சாரம் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 30 Oct 2021 5:06 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?