/* */

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

நாகை மீனவர்களை 9 பேரை படகுடன் கைது செய்து யாழ்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்

HIGHLIGHTS

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 9  பேரை கைது செய்த இலங்கை கடற்படை
X

நாகப்பட்டினம் மீன்பிடித்தளம்(பைல் படம்)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் சேவாபாரதியை சேர்ந்தவர் சிவா இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 9 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை கீச்சாங்குப்பம் சேவா பாரதியை சேர்ந்த சின்னதுரை (60), அதே பகுதியை சேர்ந்த சிவபாரதி ( 27 ), சௌந்தர்ராஜன் (34 ), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35), அதே பகுதியை சேர்ந்த செல்வம்( 45 ), அக்கரை பே ட்டையை சேர்ந்தவர்கள் செல்வநாதன் (29), ரெத்தினசாமி (34), சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன் (40), முருகேசன்(55) ஆகிய 9 மீனவர்களை படகுடன் கைது செய்து யாழ்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

மீனவர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளனர். பின்னர் மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள். அதே போல் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சென்ற 13 மீனவர்கள் என மொத்தம் 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Updated On: 24 Feb 2022 5:49 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!