/* */

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 35 ஆயிரம் பேர் விண்ணப்பம்

வரும் புதன்கிழமை வரை விண்ணப்ப அவகாசம் இருப்பதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு   35 ஆயிரம் பேர் விண்ணப்பம்
X

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்.(கோப்பு படம்)

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் கடந்த திங்கள்கிழமையுடன் (ஜூலை 10) நிறைவடையவிருந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,127 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 11,249 பேரும் என மொத்தம் 35,376 போ் இதுவரை விண்ணப்பித்துள்ளனா். வரும் 12-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதைத் தொடா்ந்து கலந்தாய்வைத் தொடங்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களே அகில இந்திய அளவில் அதிகளவில் முதலிடம் பெற்றுள்ளனர். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்களும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்னும் இரண்டு நாட்கள் விண்ணப்பிக்க அவகாசம் உள்ள நிலையில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாற்பது ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Updated On: 12 July 2023 6:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு