/* */

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

சீர்காழியில் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சீர்காழியில் ரூ. 3 லட்சம்  மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் கைதானவர் மற்றும் போலீசார் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் வந்தது.இதனையடுத்து தனிப்படை போலீசார் சீர்காழி நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. மேலும் புகையிலை பொருட்களை அருகே உள்ள கடையில் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சீர்காழி திருக்கோலக்கா தெரு மளிகை கடையில் சோதனையிட்டனர்.

அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான 9200 பாக்கெட் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அதனை விற்பனை செய்த கஜேந்திரன் என்பவரை கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய கடை உரிமையாளர் வினோத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 15 Oct 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!