/* */

நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சென்ற 2 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயம்

தரங்கம்பாடியில் நண்பரின் பிறந்தநாளை கொண்டாட சென்று கடலில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணி தீவிரம்

HIGHLIGHTS

நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சென்ற 2 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயம்
X

கடலில் மூழ்கி மாயமான மாணவர்களை தேடும் பணி நடந்து வருகிறது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஐடிஐ ஒன்றில் பயின்று வரும் மாணவர் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்கள் பத்து பேர் தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் அனைவரும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பின்புறமுள்ள முகத்துவாரத்தின் அருகே கடலில் குளித்துள்ளனர்.

கடல் அலை சீற்றமாக இருந்த நிலையில், மயிலாடுதுறை மெய்கண்டார் ஐடிஐ படிக்கும் மாணவர் பூம்புகார் அருகே உள்ள மேலையூரை சேர்ந்த சிவசக்தி.18, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் பயிலும் சேமங்கலத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ்(18) இருவரும் அலையில் சிக்கி மாயமாகினர்

அதனையடுத்து அவர்களது நண்பர்கள் கூச்சலிட்டவே, மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் கடலோர காவல் குழும ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் போலீசார் மீனவர்கள் இணைந்து படகு மூலம் மாயமான இரு மாணவர்களையும் தேடி வருகின்றனர்

Updated On: 4 Dec 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!