/* */

சீர்காழி அருகே விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

சீர்காழி அருகே விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

HIGHLIGHTS

சீர்காழி அருகே விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்
X
சீர்காழி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அற்புதராஜ் (வயது30.). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அற்புதராஜ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி மணியரசி அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அற்புதராஜ் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் அற்புதராஜ் இறப்புக்கு மனைவி மணியரசி மற்றும் மாமியாரே காரணம் என குற்றம் சாட்டி அவர்கள் இருவரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ள கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Updated On: 30 May 2022 2:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  2. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  3. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  4. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  5. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  7. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  9. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்