/* */

சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை

சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்- செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

சீர்காழி அரசு மருத்துவமனையில்  மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை
X

சீர்காழி அரசு மருத்துவமனை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் தான் சீர்காழி நகர் பகுதி மக்கள் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, மாதானம், புதுப்பட்டினம், பழையாறு, திருமுல்லைவாசல், எடமணல், மகேந்திரப்பள்ளி, புத்தூர், குன்னம், பெரம்பூர், கொண்டல், அகனி, வள்ளுவக்குடி, திருப்புன்கூர், பெருமங்கலம், ஆதமங்கலம், பூம்புகார், மங்கைமடம், கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, வானகிரி, பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டி உள்ளது.

இல்லையெனில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று தான் சிகிச்சை பெற வேண்டும். சீர்காழி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் மிகவும் குறைவான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இதனால் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் போதிய மருத்துவர்கள்- செவிலியர்கள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

மேலும் இரவு நேரங்களில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் சீர்காழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். நீண்ட தூரம் செல்வதால் அடிக்கடி உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் கடந்த சில மாதங்களாக இங்கு மகப்பேறு பெண் மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். அறுவை சிகிச்சை என்றால் சிதம்பரம் அல்லது திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணிகளை அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. இதனால் மருத்துவத்துறைக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 15 Jun 2023 7:48 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?