/* */

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
X

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றில் இருந்து பரவலாக மழை விட்டுவிட்டு பெய்தது. மேலும் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில், மணல்மேடு, மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது உளுந்து பயிர் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றும் இன்றும் பரவலாக மழை பெய்து வருவதால் தற்போது அறுவடைப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சம்பா அறுவடை நேரத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் பயிறு உளுந்து அறுவடை நேரத்திலும் இந்த மழையால் பாதிப்படைவது விவசாயிகள் இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 11 April 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...