/* */

மயிலாடுதுறையில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பென்ஷன் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் ஓய்வூதியர் சங்கங்களின்  கூட்டமைப்பு  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சா.ஜெகதீசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில முன்னாள் துணைத் தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் கிளை செயலாளர் ரவி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 77 மாத கால அகவிலைப்படியை வழங்க வேண்டும், பென்சன் மறுநிர்ணயம் வழங்கி வேண்டும், மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Updated On: 26 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி