Begin typing your search above and press return to search.
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொக்கம்
ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார்
HIGHLIGHTS
மயிலாடுதுறையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை பாரதிமோகன் தனியார் அறக்கட்டளை தலைவர் பாரதி மோகன் தலைமையில் நடைபெற்றநி கழ்வில், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பனை விதை நடும் திட்டத்தை தொடக்கி வைத்து. மரம் நடுவதின் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.
இதன் மூலம், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா வீரசோழன் ஆற்றின் படுகையில் பெரம்பூர் முதல் பொறையார் வரை 23 கி.மீ தொலைவுக்கு 20 ஆயிரம் பனை விதைகள் நடப்படுகிறது நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.