/* */

மயிலாடுதுறை: கோவில் காவலாளியை கொன்று நகை திருட முயன்றவர் கைது

மயிலாடுதுறையில், கடந்த ஆண்டு கோயிலில் திருட முயன்ற போது தடுத்த காவலாளியை கொலை செய்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை: கோவில் காவலாளியை கொன்று நகை திருட முயன்றவர் கைது
X

மயிலாடுதுறை பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றங்கரையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தங்கி இரவுநேர காவலராக பணியாற்றி வந்தவர், செங்கமேட்டுத் தெருவை சேர்ந்த சாமிநாதன்(55) .

கடந்த ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி, சாமிநாதனை தாக்கி கொன்றுவிட்டு, கோயிலில் உண்டியலில் பணம் திருட முயன்றார். படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாமிநாதன் மே மாதம் 14-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளை கொண்டு மர்மநபரை தேடிவந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் மருதகுடியை சேர்ந்த கோவிந்தராஜ் (42) என்பவர், இதை செய்ததை கண்டறிந்தனர். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 8 May 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?