/* */

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் மெய்யநாதன்

திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் முதல்வரின் நலத்திட்டங்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து சேரும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் மெய்யநாதன்
X

பிரச்சாரத்தில் பேசும் அமைச்சர் மெய்யனாதன் .

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட வார்டுகள் மற்றும் மணல்மேடு பேரூராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு திரட்டினார். மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரஜினியை ஆதரித்து சித்தர்காடு பகுதியில் அமைச்சர் பேசியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவே போற்றக்கூடிய நேர்மையான ஆட்சியை தந்து வருகிறார். மயிலாடுதுறை நகராட்சியின் முக்கியமான பிரச்னையாக உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் மீண்டும் புதிதாக ஏற்படுத்தப்படும். பொறுப்பேற்ற 8 மாதங்களில் மயிலாடுதுறையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரூ.36 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மயிலாடுதுறையில் விரைவில் புறவழிச்சாலை அமைக்கப்படும். திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் முதல்வரின் நலத்திட்டங்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து சேரும். எதிர்கட்சியினருக்கு வாக்களித்தால் அவர்களது வீடுகளுக்கு சென்று சேர்ந்து விடும் என்றார். அப்போது, திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 14 Feb 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்