/* */

மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு வரவேற்பு..

Mayuram Vedanayagam Pillai-மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Mayuram Vedanayagam Pillai
X

Mayuram Vedanayagam Pillai

Mayuram Vedanayagam Pillai-மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை கி.பி. 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் பிறந்தவர். மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக பணியாற்றிய இவர், மயிலாடுதுறை நகராட்சியில் முதல் நகர்மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இதன்காரணமாக இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியவர். வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த நாவல் கதைகளைப்போன்று, பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதி தமிழின் முதல் புதினத்தை இயற்றியவர் என்ற பெயர் பெற்றார்.

இவரது நினைவிடம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் காந்திஜி சாலையில் அமைந்துள்ளது. தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை, மயிலாடுதுறை முத்தமிழ் மன்றம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம், மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர், தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 6 April 2024 4:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!