/* */

மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் துவங்கியது

மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவங்கி இருப்பது பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் துவங்கியது
X

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட ரயிலுக்கு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறையிலிருந்து திருச்சி செல்லும் 8.15 மணி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்த ரயில் சேவை இன்று காலை துவங்கியது. 8:15 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு 10.40 மணிக்கு சென்றடைகிறது.

மீண்டும் திருச்சியில் இருந்து மதியம் 12. 50 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேர்கிறது. தற்போது வார வேலை நாட்களில் மட்டும் இந்த ரயில் இயங்கும் என்றும் சனி ,ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வேலைக்கு செல்பவர்களும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பெரிதும் உதவியாக இருந்த இந்த ரயில் சேவை மீண்டும் இன்று காலை துவங்கியது காரணமாக ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேநேரம் வர்த்தகர்கள் மருத்துவமனைக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை புறப்பட்டு ரயிலுக்கு கற்பூரம் காட்டி தேங்காய் உடைத்து இனிப்புகள் வழங்கி ரயில் பயணிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 15 Dec 2021 6:19 AM GMT

Related News