/* */

மயிலாடுதுறை அருகே சொகுசு காரில் சாராயம் கடத்தியவர் கைது

மயிலாடுதுறை அருகே, சொகுசு காரில் சாராயம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே சொகுசு காரில் சாராயம் கடத்தியவர் கைது
X
பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் கைதானவர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில், சாராய விற்பனையை தடுப்பதற்காக காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரம்பூர் அருகே காருகுடி என்ற இடத்தில் காரைக்காலில் இருந்து வேகமாக வந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்தினர்.

இச்சோதனையில், அக்காரில் மூட்டை மூட்டையாக பாண்டி சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது. செம்பனார்கோவிலைச் சேர்ந்த குமார் (44) என்பதும் மயிலாடுதுறை அருகில் தனியூர் என்ற இடத்தில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து சாராயத்தை பாக்கெட் போட்டு சில்லரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, குமாரை கைது செய்து, சாராயம் மற்றும் காரினை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வத்திடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் மற்றும் சாராயத்தின் மதிப்பு ரூ.13.20 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 15 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!