/* */

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரம்: சிவனடியார்களுக்கு அருளாசி

இதையொட்டி ஞானமா நடராஜப்பெருமான் மற்றும் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது

HIGHLIGHTS

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரம்: சிவனடியார்களுக்கு  அருளாசி
X

திருவாவடுதுறை ஆதினத்தில் ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு சிவனடியார்களுக்கு வஸ்திர தானம், சேவையாளர்களுக்கு பொற்கிழி வழங்கி ஆதீனகர்த்தர் அருளாசி

திருவாவடுதுறை ஆதினத்தில் ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு சிவனடியார்களுக்கு வஸ்திர தானம், சேவையாளர்களுக்கு பொற்கிழி அளித்து ஆதீனகர்த்தர் அருளாசி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மைவாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இவ்வாதீனத்தின் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தற்போது அருளாட்சி புரிந்து வருகிறார். இவரது ஜென்ம நட்சத்திர விழா ஆதீன மடாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை ஞானமாநடராஜப்பெருமான் மற்றும் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மேலும் ரத்த தான முகாம், பல் சிகிச்சை மருத்துவ முகாம் உள்ளிட்ட முகாம்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து விழாவில் பல்வேறு சமுதாய மக்கள் சேவையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு "மனிதநேய மாமணி" என்ற பட்டத்தை வழங்கி பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. மேலும், சிவனடியார்கள் 100 பேருக்கு ஆதீனகர்த்தர் வஸ்திரங்களை வழங்கி அருள் ஆசி கூறினார். இதனை தொடர்ந்து மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Updated On: 24 May 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  6. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  7. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  10. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...