/* */

மயிலாடுதுறை அருகே சிதிலமடைந்த வீட்டில் வசித்த மூதாட்டிக்கு உதவி

மயிலாடுதுறை அருகே சிதிலமடைந்த வீட்டில் வசித்த மூதாட்டிக்கு நண்பர்கள் குழு மூலம் வீடு அமைத்து கொடுத்து உதவி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே சிதிலமடைந்த வீட்டில் வசித்த மூதாட்டிக்கு உதவி
X

மயிலாடுதுறை அருகே நண்பர்கள் குழுவினர் மூதாட்டிக்கு உதவி செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட எருக்கட்டாஞ்சேரி தெற்கு மேட்டுச்சேரியில் மெர்சி என்ற மூதாட்டி மிகவும் சிதிலமடைந்த கூரை கூட இல்லாத வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். இதனை அறிந்த தரங்கம்பாடி பொதுத்தொழிலாளர் சங்க பொறுப்பாளரும் முன்னாள் கவுன்சிலருமான மாணிக்க அருண்குமார் தனது முக நூல் நண்பர்கள் மூலம் நிதி திரட்டி சுமார் 40 ஆயிரம் மதிப்பில் கூரை வீடு அமைத்தும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கியும் உதவியுள்ளார்கள்.

இதில் சின்னத்திரை நட்சத்திரம் அறந்தாங்கி நிஷா, சென்னை தொழிலதிபர் கிளாசிக் சுரேஸ், தரங்கம்பாடி செயல் அலுவலர் கமலக்கண்ணன், ஆசிரியை மீனாட்சி உட்பட பல முகநூல் நண்பர்கள் மற்றும் விநாயகர் பாளையம் பொறுப்பாளர்கள் இணைந்து உதவியுள்ளனர் இதேபோன்று தொடர்ந்து பல உதவிகளை ஏழ்மையில் இருப்பவர்களை தேடி செய்து வருகின்றனர். இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Updated On: 20 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?