/* */

சீர்காழியில் கூரை வீடு தீயில் எரிந்து சேதம்

சீர்காழியில் கூரை வீடு தீபிடித்து எரிந்தது. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

HIGHLIGHTS

சீர்காழியில் கூரை வீடு தீயில் எரிந்து சேதம்
X

சீர்காழியில் கூரை வீடு தீபிடித்து எரிந்தது. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம். இவர் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். செல்வம் மனைவி சாந்தி வீட்டில் சமையல் வேலை செய்யும் போது காற்று பலமாக வீசியதால், அடுப்பிலிருந்து தீ காற்றில் பரவி வீட்டின் கூரை தீ பற்றியது. தீயை அணைப்பதற்குள் மேற்கூரை முழுவதுமாக மளமளவென்று தீ பற்றி எரிய தொடங்கியது.

இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஒரு லட்சம் மதிப்பிலான கூரை வீடு முழுமையாக சேதம் அடைந்தது.

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jun 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்