/* */

காந்தி சிலைக்கு சட்டை இல்லாமல் வந்து மாலை அணிவித்த விவசாயிகள்

மயிலாடுதுறையில் விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் வந்து மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

HIGHLIGHTS

காந்தி சிலைக்கு சட்டை  இல்லாமல் வந்து மாலை அணிவித்த விவசாயிகள்
X

மயிலாடுதுறையில் விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மதுரை வந்த தேச தந்தை மகாத்மா காந்தி விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் அரை ஆடை அணிந்து இருப்பதை பார்த்து, இந்தியாவின் கடைசி விவசாயி எப்போது முழுமையாக ஆடை அணிகிறானோ அதுவரை தானும் முழு ஆடை அணியப் போவதில்லை என்று அரை ஆடைக்கு மாறினார்.

பின்னர் அதுவே அவரது அடையாளமாக மாறிப் போனது. இந்த நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் 100 ஆண்டுகள் கடந்தும் தங்கள் நிலைமை இன்னமும் மாறவில்லை என விவசாயிகள் மயிலாடுதுறையில் உள்ள மகாத்மா காந்தியின் முழு உருவ சிலைக்கு சட்டையில்லாமல் அரை ஆடையுடன் வந்து மாலை அணிவித்து முறையிட்டனர்.

இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பங்கேற்று காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து விவசாயிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 22 Sep 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...