/* */

எல்லை வாய்க்கால் தூர்வாராததால் தொல்லை - நீரில் மூழ்கிய பயிர்கள்

மயிலாடுதுறை அருகே, தொடர் மழையால் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள், மூன்றாவது முறையாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

எல்லை வாய்க்கால் தூர்வாராததால் தொல்லை - நீரில் மூழ்கிய பயிர்கள்
X

மழை நீரில் மூழ்கிய பயிர்களை, சோகத்துடன் காட்டும் விவசாயிகள். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னூர், பாண்டூர், மகாராஜபுரம், அருண்மொழிதேவன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி, 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

கடந்த மழையின்போது மூழ்கிய பயிர்களை தண்ணீரை வடிய வைத்து, உரங்களை இட்டு காப்பாற்றிக் கொண்டிருக்கையில், தற்போது மூன்றாவது முறையாக நீரில் மூழ்குவதால் பயிர்களில் விளைச்சல் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதிக்கு வடிகால் வாய்க்காலாக விளங்கும் எல்லை வாய்காலை, பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எல்லை வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...