Begin typing your search above and press return to search.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழையால் விவசாயிகள் கவலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மயிலாடுதுறையில் பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.