/* */

குத்தாலம் அருகே பேராவூர் ஸ்ரீ ஐயனார் கோயிலின் பூட்டை உடைத்து திருட்டு

மயிலாடுதுறை அருகே குத்தாலம் அருகே பேராவூர் ஸ்ரீ ஐயனார் கோயிலின் பூட்டை உடைத்து தங்க தாலி மற்றும் பணம் திருட்டு போனது.

HIGHLIGHTS

குத்தாலம் அருகே பேராவூர் ஸ்ரீ ஐயனார் கோயிலின் பூட்டை உடைத்து திருட்டு
X

திருட்டு நடந்த அய்யனார் கோவில்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பேராவூரில் ஸ்ரீ அய்யனார் கோவில் உள்ளது. 25 ஆம் தேதி இரவு இந்த கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அய்யனார் சிலை அருகில் உள்ள சாமி பூர்ணா, புஷ்கலா சிலையில் இருந்த 4 கிராம் மதிப்பிலான 3 தாலிகள், பித்தளை அண்டா, கோயில் மணிகள், உண்டியல் பணம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து இன்று கோயில் நிர்வாகத்தினர் பாலையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கிராம கோயிலில் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 27 Jan 2022 6:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...