Begin typing your search above and press return to search.
மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை
மயிலாடுதுறை அருகே வக்காமாரி கிராமத்தில் கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
HIGHLIGHTS
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வக்காரமாரியில் முட்டம் பாலம் செல்லும் வழியில் காளியம்மன் கோயில் உள்ளது. நேற்றிரவு இக்கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் ஒன்றேகால் அடி உயரமுள்ள சுமார் 60ஆயிரம் மதிப்புடைய வெண்கலச் சிலை, அம்மன் தாலி, 2 குத்துவிளக்கு, 2 தாம்பாளம், பீரோவில் வைக்கப்பட்டிருந்த கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்ய பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.42 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோயில் உண்டியல் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து கோயில் பூசாரி சங்கர் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவம் வக்காரமாரி கிராமமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.