/* */

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை

மயிலாடுதுறை அருகே வக்காமாரி கிராமத்தில் கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை
X

மயிலாடுதுறை அருகே வக்காமாரி கிராமத்தில் கொள்ளை நடந்த  கிராமத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வக்காரமாரியில் முட்டம் பாலம் செல்லும் வழியில் காளியம்மன் கோயில் உள்ளது. நேற்றிரவு இக்கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் ஒன்றேகால் அடி உயரமுள்ள சுமார் 60ஆயிரம் மதிப்புடைய வெண்கலச் சிலை, அம்மன் தாலி, 2 குத்துவிளக்கு, 2 தாம்பாளம், பீரோவில் வைக்கப்பட்டிருந்த கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்ய பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.42 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோயில் உண்டியல் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து கோயில் பூசாரி சங்கர் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவம் வக்காரமாரி கிராமமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Oct 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!