Begin typing your search above and press return to search.
பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து மயிலாடுதுறையில் பா.ஜ.க.ஆர்ப்பாட்டம்
பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடி வருகையில் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தி ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியினரைக் கண்டித்து மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி தலைவர் பாரதிகண்ணன் தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட தலைவர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் பங்கேற்று கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தி காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.