/* */

சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது தாக்குதல்

ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினரை தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

HIGHLIGHTS

சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது தாக்குதல்
X

சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மீனவர்கள்

வட்டாட்சியரிடம் புகார் அளித்த ஆத்திரத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினரை தாக்கியதில் காயமடைந்த 5 பேர் சீர்காழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் கர்ணன், ஜெயக்குமார், மாதவன் உள்ளிட்ட 6 குடும்பத்தினரை, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், இந்தக்குடும்பங்களுக்கு மளிகை கடைகளில் எந்த ஒரு பொருளும் கொடுக்கக்கூடாது, கோயிலுக்கு வரக்கூடாது, கிராம மக்கள் யாரும் பேசக்கூடாது என மீனவ கிராமத் தலைவர் அறிவித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினர் சீர்காழி வட்டாட்சியர் சண்முகத்திடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் சண்முகம், டிஎஸ்பி லாமெக் ஆகியோர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில், கிராமத் தலைவர், கிராம மக்களை அழைத்து பேசி ஆலோசனை செய்த பின்னர், முடிவை தெரிவிப்பதாக கூறிச்சென்றார்.

இந்நிலையில், வட்டாட்சியரிடம் புகார் அளித்த ஆத்திரத்தில் இருந்த கீழமூவர்கரை சேர்ந்த எதிர்தரப்பினர், கோஷ்டியாகச் சேர்ந்து , ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தினரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த 5 மீனவர்கள் உள்பட பலரும், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . மேலும் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊரை காலி செய்து, குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Sep 2021 2:17 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்