/* */

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று. வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று
X

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

நாளை வாக்குப் பதிவை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், கட்சி முகவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாத நிலையில் அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கொரோனா தடுப்பூசி இரண்டு முறை செலுத்தி கொண்டுள்ளார் என்பதும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு முன்பாகவே அவருக்கு ஒரு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 May 2021 5:00 AM GMT

Related News