/* */

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 478 குவிண்டால் பருத்தி ஏலம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 478 குவிண்டால் பருத்தி ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 478 குவிண்டால் பருத்தி ஏலம்
X

ஏலம் விடுவதற்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,123க்கும், சராசரி 6,540க்கும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 வியாபாரிகள் பங்கேற்று, 374 விவசாயிகள் கொண்டுவந்திருந்த 478 குவிண்டால் பருத்தியைக் கொள்முதல் செய்தனர்.

பருத்தியைப் போன்றே விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான நெல், பயறு, உளுந்து, நிலக்கடலை, முந்திரி, துவரை, தேங்காய், மிளகாய், கரும்பு வெல்லம் போன்ற ஆகியவற்றை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்று பயனடையுமாறும், விளைபொருட்களை நாகை விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி, வேதாரண்யம், கீழ்வேளூர், திருப்பூண்டி மற்றும் நாகப்பட்டினம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெற்று அதிகவிலை கிடைக்கும் நேரங்களில் விற்று பயனடையுமாறு விவசாயிகளுக்கு நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 5 Oct 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!