/* */

முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைப்பு

இன்று முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம்  கடைகள் அடைப்பு
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கடந்த 6ம்தேதி முதல் தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்து நடைமுறைபடுத்தி வருகிறது. அந்த வகையில் 2வது ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் காமராஜர் சாலை பெரியகடைவீதி கூட்டம் நிறைந்த வண்டிக்கார தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Updated On: 16 Jan 2022 6:05 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்