/* */

சீர்காழி அருகே பசுமாட்டை சித்ரவதை செய்த 2 பேர் கைது

சீர்காழி அருகே பசுமாட்டை சித்ரவதை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சீர்காழி அருகே பசுமாட்டை சித்ரவதை செய்த 2 பேர் கைது
X

சீர்காழி அருகே  சித்ரவதை  செய்யப்பட்ட பசுமாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை இவரின் பசு மாடு அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி,பாலசுந்தரம் மன்மதன், சுபாஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான வயலில் மேய்ந்துள்ளது,

இதனால் ஆத்திரமடைந்த ரவி,பாலசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து பசு மாட்டின் இரண்டு காதுகள் மற்றும் வால் பகுதியை அரிவாளால் வெட்டி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த பசுமாடு ரத்தம் ஒழுகிய படி நின்றுள்ளது.இதனைப் பார்த்த அண்ணாதுரை அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுதொடர்பாக அண்ணாதுரை வயலின் உரிமையாளர்கள் 4 பேர் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் வயலின் உரிமையாளர்களான ரவி, பாலசுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மன்மதன், சுபாஷ் உள்ளிட்ட மற்ற இருவரையும் தேடி வருகிறார்கள்.

Updated On: 18 Sep 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...