Begin typing your search above and press return to search.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஜூன் 12-ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், பாலையூர், மங்கைநல்லூர், செம்பனார்கோவில், சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு உகந்தது என்பதால் குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.