/* */

மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ் பறிமுதல்

மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களை ஆர்டிஒ பறிமுதல் செய்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ் பறிமுதல்
X

மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 1ம் தேதி பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் வேன்(மேக்சிகேப்) வாகனம் விபத்துக்குள்ளாகி 28 மாணவர்கள் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் முறையான அனுமதி இல்லாததால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் முறையான அனுமதி இல்லாமல் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் உத்தரவிட்டதன்பேரில், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் தனியார் கல்வி நிறுவன வாகனங்கள், தனியார் மேக்ஸி கேப் வேன்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு முறையான ஆவணங்கள் உள்ளனவா என கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வாகன சோதனையில் 2 தனியார் பள்ளி பஸ்கள், 5 மேக்ஸி கேப் வாகனங்கள், 5 ஆட்டோக்கள் தகுதி சான்று புதுப்பிக்காமலும், அனுமதிச்சீட்டு இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இன்சூரன்ஸ் இல்லாமலும், தகுதியான ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் இயக்கியதால் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டன.

Updated On: 5 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை