/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்
X

நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மதுரையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

10 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மதுரை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் உள்ளனர்.மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக உள்ள மதுரை கிழக்கு தொகுதியில் 3லட்சத்து 28 ஆயிரத்து 990 வாக்காளர்களும், குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியான சோழவந்தான் தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 106 வாக்காளர்களும் உள்ளனர்.2716 வாக்கு பதிவு மையங்களில் 3856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.1330 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் கூடுதலாக 1140 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.வாக்குபதிவு இயந்திரங்கள் மொத்தமாக வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்திலிருந்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்படுகிறது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு வாகனத்திலும் GPS கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

Updated On: 6 April 2021 2:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி