/* */

உசிலம்பட்டி அருகே கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

உசிலம்பட்டி அருகே கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

சோழவந்தான் அருகே, செல்லம்பட்டி ஒன்றியம் முதலைகுளம் ஊராட்சி, கீழப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மயானத்துக்கு சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி அறிவழகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்த உசிலம்பட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக் குழுவினரிடம் மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை பணிகள் முறையாக நடந்து வருகிறது. விரைவில் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கான நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அப்போது, துணை வட்டாட்சியர் தெய்வேந்திரன், வருவாய்ஆய்வாளர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாகஅலுவலர் ஜோதிராஜ், ஊராட்சி மன்றச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்து இருந்தனர்.

Updated On: 15 Jan 2022 4:25 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்