/* */

ராணுவ தலைமை தளபதி மறைவுக்கு மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு, மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ராணுவ தலைமை தளபதி மறைவுக்கு மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
X

முப்படை தலைமை தளபதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள். 

இந்தியாவின் முப்படைத்தலைமை தளபதியான பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் கோர விபத்தில் வீர மரணம் அடைந்தார். இதில், அவரது மனைவி உள்பட 13 வீரர்கள் உயிரிழந்த சம்பவம், நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர், முப்படை தலைமை தளபதியின் திரு உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.


இதன் ஒரு பகுதியாக, மதுரை காந்தி மியூசியத்தில் காந்தி மியூசியம் மற்றும் பாரதி யுவகேந்திரா அறக்கட்டளை சார்பாக அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் ஜவகர் பாபு தலைமையில், செயலாளர் நந்தாராவ், சமூக ஆர்வலர்கள் நெல்லை பாலு, ஈஷா கரீம் ஆகியோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மறைந்த ஜெனரல் பிபின் ராவத்திற்கு நினைவஞ்சலி செலுத்தினர். நிகழ்வு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களும், பிபின் ராவத்தின் திரு உருவ படத்துக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

Updated On: 9 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு