/* */

மதுரையில் அக்.29-ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம்

HIGHLIGHTS

மதுரையில்  அக்.29-ல்  மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மதுரை விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வண்ணம் ஒவ்வொரு மாதமும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான, மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமையில் 29.10.2021 (வெள்ளிக்கிழமை)-அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக நடைபெற உள்ளது.

அக்கூட்டத்தில், விவசாயம் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கோவியேட்-19 நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின்படி, சமூக இடைவெளியினை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றை தவறாது கடைபிடித்திட வேண்டும்மென்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 25 Oct 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  2. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  3. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  4. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  5. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  6. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  7. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  8. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  9. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  10. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?