/* */

சோழவந்தான் அருகே சிவன் கோயிலில் பாலாலயம்

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிவனேசவல்லி தாயார் என்ற மருதப்ப சாமி திருக்கோவில் உள்ளது

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே சிவன் கோயிலில்  பாலாலயம்
X

சோழவந்தான்  வி . கோவில்பட்டியில் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோவில் பாலாலய விழா நடைபெற்றது 

சோழவந்தான் அருகே வி . கோவில்பட்டியில் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோவில் பாலாலய விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் அருகே வி.கோவில்பட்டி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிவனேசவல்லி தாயார் என்ற மருதப்ப சாமி திருக்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத் திருக்கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது .

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பாலாலயம் நடைபெற்றது. வீரபாகு கார்த்திக் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாக வேள்வியினை நடத்தி பூர்ணாஹுதி நிறைவுற்று மேளதாளம் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ கதிரவன், விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலியுக நாதன், செயலாளர் பால்பாண்டி, தக்கார் சுதா, பூசாரி கருத்தபாண்டி, திருப்பணி கமிட்டியாளர்கள் பாலசுப்பிரமணி, பழனிவேல், கண்ணன், பூர்வலிங்கம், மகாமுனி, செல்வம், வீரபாண்டி ,ஆர்கே சாமி ,வீரசிங்கம் தங்கதுரை மற்றும் நிர்வாகிகள் எட்டூர்கிராம பொதுமக்கள் சிவனடியார்கள் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Jun 2023 11:00 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை