/* */

வண்டியூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென ஆணையர் அறிவுறுத்தினார்

HIGHLIGHTS

வண்டியூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
X

மதுரை வண்டியூர் பகுதியில் கட்டப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்

மதுரை மாநகராட்சி வண்டியூரில் புதிதாக கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்புநிலையத்தின் கட்டுமானபணிகளை ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சிசீர்மிகு நகரதிட்டத்தின் கீழ் வண்டியூரில், புதிதாககட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின்கட்டுமானபணிகளை,ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், நேரில் பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி சீர்மிகுநகரதிட்டத்தின் கீழ், மதுரை மாட்டுத்தாவணியில், ஒருங்கிணைந்தமொத்த பழ அங்காடிமையம், பெரியார் பேருந்து நிலையம், சுற்றுலாதகவல் மையம்,குன்னத்தூர் சத்திரம், அருள்மிகுமீனாட்சிஅம்மன் திருக்கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசிவீதிகளில் ஸ்மார்ட் சாலைகள் மற்றும் நவீன குழல் விளக்குகள் பொருத்துதல், பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், தமுக்கம் மைதானத்தில் மதுரை மாநாட்டு மையம் , வைகைஆற்றில்இரு கரைகளில் மேம்பாட்டு பணிகள், திருமலை நாயக்கர் மகாலை சுற்றியுள்ள பகுதிகளில், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்டபணிகள், மாநகராட்சிசார்பில், மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரபட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம்,குடிநீர்குழாய் அமைத்தல்,சாலைகள் அமைத்தல், போன்ற பணிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு நிதி பெறப்பட்டு பணிகள் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் படி, மண்டலம் 1 வண்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சேரும் கழிவுநீரைசுத்திகரிப்பு செய்வதற்கு வண்டியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின், கட்டுமான பணிகளை,ஆணையாளர் பார்வையிட்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மாநகரபொறியாளர் அரசு,செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, உதவிஆணையாளர் காளிமுத்தன் உட்பட மாநகராட்சி அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க