/* */

ஒரு வருடத்திற்கு மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பிரபல கொள்ளையன் கைது

நகர் பகுதியில் கொள்ளையடித்து ஓராண்டாக காவல்துறையிடம் சிக்காமல் இருந்த பிரபல கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஒரு வருடத்திற்கு மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பிரபல கொள்ளையன் கைது
X

போலீசாரிடம் சிக்கிய சந்திரகுமார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் பகுதியில் 2020ஆம் ஆண்டு கொள்ளையடித்த கொள்ளையனை தனிப்படையின் தீவிர முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை உச்சப்பட்டி அகதி முகாமைச் சேர்ந்த முனியாண்டி மகன் கேத்தீஸ்வரன் என்ற சந்திரகுமார் (34/ 22) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் திருமங்கலம் உட்கோட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் தாக்கலான கன்ன களவு வழக்குகளில சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

கன்னக்களவு வழக்குகளில் சம்பவ இடங்களை கைவிரல் ரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட கைவிரல் ரேகை மாதிரிகளை சந்திரகுமார் கைரேகையுடன் ஒப்பீடு செய்ததில் கை ரேகை ஒத்துபோனது.

பின்னர் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் 3 மேலும் வழக்குகளில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் கைப்பற்றப்பட்டு சந்திரகுமார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தபட உள்ளனர்.

மேற்படி நான்கு வழக்குகளில் களவுபோன சுமார் 60 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.வழக்குகளில் புலன் விசாரணை மேற்கொண்டு சந்திரகுமாரையும், களவுபோன சொத்துக்களையும் கைப்பற்றிய தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் பாராட்டினார்.

Updated On: 3 April 2022 12:06 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  2. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  3. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  6. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  10. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...