Begin typing your search above and press return to search.
திருமங்கலம் ரயில் நிலையத்திலுள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை திருமங்கலம் ரயில் நிலைய வளாகத்திலுள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலைய வளாகத்தின் முன்பு அமைந்திருக்கும் 70 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழாவினை திருமங்கலம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் குணசீலன் மற்றும் வைரமணி இவர்களது தலைமையில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. விழாவில் ரயில் நிலைய ஊழியர்கள், முக்கிய அதிகாரிகள், மேலும் இப்பகுதி வாழ் சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு பயபக்தியுடன் விநாயகப்பெருமானை வணங்கினர். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.