/* */

மதுரை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: ஆட்சியர் பங்கேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: ஆட்சியர் பங்கேற்பு
X

மதுரை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்களின் குறைகளை களைவதற்காக, வாரந்தோறும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில், கலந்து கொண்டு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர். பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற தகுதியான மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கவும்இ பெறப்பட்ட தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், அறுவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி 63 மனுக்கள், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றகோரி 12 மனுக்கள், சாதிச்சான்றுகள் வேண்டி 5 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான 4 மனுக்கள், முதியோர் உதவித்தொகை விதவை, உதவித்தொகை விபத்து நிவாரணத்தொகைமாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை தொடர்பான 5 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 62 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரியது (சாலை தெருவிளக்கு தண்ணீர் குழாய் பேருந்து வசதி தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள்) தொடர்பான 20 மனுக்கள்,

புகார் தொடர்பான 9 மனுக்கள், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண்குழந்தைகள் திட்டம் மற்றும் சலவைப்பெட்டி தொடர்பான 2 மனுக்கள், பென்சன் நிலுவைத்தொகை ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 5 மனுக்கள், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் இராஜாக்கூர் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் தொடர்பான 99 மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் 86 என மொத்தம் 372 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Nov 2021 5:35 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு