/* */

எம்.ஜி.ஆர். புகழை யாரும் அழிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் பேச்சு

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக் குமார் கலந்து கொண்டு பேசினார்

HIGHLIGHTS

எம்.ஜி.ஆர். புகழை யாரும் அழிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் பேச்சு
X

அ.தி.மு.க.சார்பாக, நாடாளுமன்றதேர்தல் பூத்கமிட்டி அமைக்க ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. 

சத்துணவு திட்டப்பெயர்ப்பலகையை அகற்றுவதால், எம்.ஜி.ஆரின் புகழை அழித்துவிட முடியாது என்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் .

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க.சார்பாக, நாடாளுமன்றதேர்தல் பூத்கமிட்டி அமைக்க ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார்.. முன்னாள் எம்.எல்.ஏ.கள் கருப்பையா, மாணிக்கம், மாவட்டப்பொருளாளர் திருப்பதி, முன்னாள்பேரூராட்சிதுணைத்தலைவர் சோனை, ஒன்றியச்செயலாளர் காளிதாஸ், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, மாவட்ட துணைச்செயலாளர் லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரவை துணைச் செயலாளர் சந்தனதுரை வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், மாவட்டச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது.- ஒரேநாடு ஒரேதேர்தல் என்று பலகட்ட ஆய்வுகளுக்கு பின், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவித் தலைமையில் 8பேர்கொண்ட குழுஆய்வு செய்து அந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள்.

அங்கு இருஅவைகளிலும் விவாதித்தபின் சட்டத்தை நிறைவேற்றி விட்டால்; அது தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் செல்லும் என்பது முத்துவேல்கருணாநிதிஸ்டாலினுக்கு தெரியாதா.. அறியாமையில் புலம்புகிறார். முதல்வராக இருந்தும் கூட இது தெரியவில்லை என்பது வேதனையாக உள்ளது. திருமணவீட்டில் மணமக்களை வாழ்த்த வந்தவர் மாலையும் கழுத்துமாக காத்திருக்கும் வேளையிலே மணமக்களை வாழ்த்தாமல் ஆட்சி பறிபோகிவிடுமோ என்ற பயத்தில் தனது கவலை பகிர்ந்துகொண்டார். பாவம் மணமக்கள். ஆட்சி அதிகாரம் போய் விட்டால், என்னசெய்வது என்று கவலையோடு பேசியிருக்கிறார். எப்போது எல்லாம் தி.மு.க.ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் ஆட்சி அற் பஆயுசிலே கவிழ்ந்துவிடும் என்பதுதான் கடந்த கால வரலாறு.அது கருணாநிதி காலத்திலிருந்து தொடர்கிறது.

அது ,தற்போது மு.க.ஸ்டாலின் காலத்திலும் தொடர இருக்கிறது. வாரிசு அரசில்வாதியான உதயநிதியோ திடீர் என்று ஞானோதயம் பிறந்தவராக சமூகநீதிக்கும் சமத்துவத்துக்கும் இது சனாதனம் என்று சொல்லுகிறார். நான் கேட்கிறேன் இந்த தமிழகத்திலே சனாதானத்தை முழுமையாக படித்தவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் யாரவது இருக்கிறார்களா என்று சொன்னால், அதற்கு கேள்விகுறிதான் மிஞ்சும்.

பழக்க வழக்கத்தையும், மரபுகளையும் ஒப்பிட்டுபேசுவது என்பது அது கருத்துக்குகருத்துமோதல்கள் ஜனநாயக நாட்டிலே வரவேற்ககூடியது பாராட்டகூடியது. ஆனால், உதயநிதிஸ்டாலின் தன்னை தலைவராக நிலைநிறுத்திக் கொள்வதற்காக மாற்று கருத்துள்ளவர்களை எதிர்க்கமாட்டோம் அதை அழிப்போம் என்று சொல்லுகிற ஒரு சர்வாதிகாரபோக்கில் பேசியிருப்பது தமிழ்நாடு முழுவதும் இன்று கொந்தளிப்பை ஏற்படுத்தி தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதிமுக.ஆட்சி காலத்திடங்களை, அரசியல் காழ்புணர்ச்சிகாரணமாக தி.மு.க ஆட்சியில் ரத்து செய்யப் பட்டுள்ளது. சத்துணவுதிட்டம் தந்த சரித்திர நாயகன் என்று எம்.ஜி.ஆர் என்று ஐக்கிய நாட்டு சபையில் சொல்வார்கள். தி.மு.க இன்று காலஉண வுதிட்டம் கொண்டு வருவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை .

மாணவர்கள் பயனடைகிறார்கள் என்றால், அதை வரவேற்போம். ஆனால் 1வகுப்பு முதல் 5வகுப்புவரை கொடுக்கப் படுகிறது. ஆனால் சத்துணவு 1வகுப்பு முதல் 10வகுப்புவரை கொடுக்கப் படுகிறது. இதில் 6வகுப் புமுதல் 10வகுப்புவரை காலை உணவு யார்கொடுப்பார்கள். எதற்கு இந்த வேறுபாடு. காலைஉணவுதிட்டத்தை அமல்படுத்தும் போது ஒரே மாதிரியாக அமல் படுத்தவேண்டும். இதனால் ,குழப்பம் ஏற்படுகிறது சத்துணவுதிட்டம் நிறுத்தப்பட்டுவிடுமோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

காரணம் சத்துணவு திட்டபோர்டுகள் அகற்றப்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆர். திருப்பெயரை தங்கிய பெயர்ப் பலகைகளை அகற்றிவிட்டு, காலை உணவுதிட்ட பெயர்ப்பலகை வைப்பதனால் எம்.ஜி.ஆர்.புகழை எந்தகாலத்திலும் யாராலும் அழிக்கமுடியாது.அது இதயத்தில் ஊறிபோய்உள்ளது. ரத்தத்தில் கலந்துபோய் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் சூர்யா, வெங்கடேஸ்வரி, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், கீதா, 18வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில், பேரூர்பேரவைச்செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

Updated On: 5 Sep 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு